பாராட்டு விழாக்களில் புறக்கணிக்கப்பட்ட கிழக்கு மாகாண அதிபர் மற்றும் ஆசிரியர்கள்
சாதாரண தரப் பெறுபேறுகள் தொடர்பில் நடாத்தப்பட்ட பாராட்டு விழாக்களில் கிழக்கு மாகாண அதிபர் ஆசிரியர்கள் புறக்கணிக்கபட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
ஆளுநரை நேரில் சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் க.பொ.த (சா.த) பரீட்சை அடைவு மட்டத்தில் பின்னடைந்திருந்த கிழக்கு மாகாணம் கடந்த ஆண்டு 2ஆம் இடத்திற்கு முன்னேறியிருந்தது. இதற்காக கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் மாகாணக் கல்வி அமைச்சு செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் பாராட்டுப் பத்திரம் (Commendation) வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கோரிக்கை
இதேபோல, மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளரினால் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பாராட்டுப் பத்திரம் (Commendation) வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். எனினும், அடைவு மட்ட அதிகரிப்புக்கு பிரதான காரணமாக இருக்கின்ற ஆசிரியர்கள், அதிபர்கள் எவரும் இந்த விடயத்தில் இதுவரை கௌரவிக்கப்படவில்லை. அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்கள் பெரிதும் மன உழைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இது போன்ற பாரபட்சங்கள் தங்களது நிர்வாகத்தின் கீழ் இனிமேல் இடம்பெறாதிருக்கும் வகையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

எனவே, தயவு செய்து இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு இந்தப் பெறுபேறு விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிபர், ஆசிரியர்களையும் விரைவில் கௌரவிக்க ஏற்பாடு செய்ய வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 19 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல் Cineulagam