வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க உறுப்பினர்கள் மீது அச்சுறுத்தல்

Missing Persons Sri Lanka Eastern Province
By Kumar Feb 04, 2024 05:43 PM GMT
Report

திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலிருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை தொடர்பில் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (04.02.2024) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி, அம்பாறை மாவட்ட தலைவி த.செல்வராணி, திருகோணமலை மாவட்ட தலைவி தேவி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

திருகோணமலையில் குறைந்த விலையில் நெற்கொள்வனவு: விவசாயிகள் கவலை

திருகோணமலையில் குறைந்த விலையில் நெற்கொள்வனவு: விவசாயிகள் கவலை

அமைதி பேரணி

இது தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி கருத்து தெரிவிக்கையில்,


“மட்டக்களப்பில் இன்றைய தினம் (04) கிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கிழக்கு பல்லைக்கழக மாணவர்கள் இணைந்து அமைதியான முறையிலான அமைதி பேரணி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க உறுப்பினர்கள் மீது அச்சுறுத்தல் | Eastern Province Missing Relations Association

இதற்காக அதனை முன்னின்று நடாத்தியதாக 16 பேருக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியதற்காக அதற்கு தடைகளை ஏற்படுத்தி எங்களை அச்சுறுத்தி இந்த நாளை தமிழர்களுக்கு அநீதியான தினம் என்பதை சர்வதேசத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இலங்கையின் பொலிஸாரும் அரசும் உணர்த்தியுள்ளனர்.

இலங்கை சுதந்திர தினம்

இலங்கை சுதந்திர தினம் இந்த நாட்டு மக்களுக்கான சுதந்திரதினமாக சொல்லப்பட்டாலும் எங்களுக்கு எந்த சுதந்திரமும் இல்லை. 

அதன் காரணமாகவே அதனை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் நாங்கள் இருக்கின்றோம்.கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் இன்றைய தினம் எங்கள் தாய்மாரின் உள்ளக்குமுரல்களை வெளிப்படுத்தமுடியாத வகையில் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க உறுப்பினர்கள் மீது அச்சுறுத்தல் | Eastern Province Missing Relations Association

அவர்கள் களியாட்டங்களை நடாத்தி மகிழ்ச்சிகொள்கின்றனர்.பாதிக்கப்பட்ட மக்களாகிய எங்களுக்கு அந்த மனநிலையில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்காக குரல்கொடுக்கமுடியாத, அவர்களுக்கான குரல்கொடுக்கமுடியாத சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டு நாங்கள் தாக்கப்பட்டுவருகின்றோம்.எங்களை கைது செய்கின்றார்கள்.

எங்களை குற்றவாளிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்பட்டு நீதித்துறையில் கூட நாங்கள் நம்பிக்கையிழக்கும் வகையில் நீதித்துறையினைக்கூட பயன்படுத்தி எங்களை ஒடுக்கி அச்சுறுத்தி எங்களது உணர்வுகளைகூட அழிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க உறுப்பினர்கள் மீது அச்சுறுத்தல் | Eastern Province Missing Relations Association

பொலிஸார் தடையுத்தரவுகளை தருவதற்காக இரவு வேளைகளில் வீடுகளுக்கு வந்து வீட்டு கதவுகளை அடித்து சத்தமிட்டு பிரயத்தனங்களை முன்னெடுத்தனர்.

எங்களது உறவினர்களையும் அச்சுறுத்தி அவர்களிடம் எங்களுக்கான தடையுத்தரவுகளை வழங்குவதற்கு எத்தனித்தனர். அத்துடன் அவர்களையும் பொலிஸார் மிரட்டியுள்ளனர்.

கிளிநொச்சி போராட்டத்தில் பொலிஸார் நடத்திய தாக்குதல்: வலுப்பெறும் தனித் தமிழீழ கோரிக்கை

கிளிநொச்சி போராட்டத்தில் பொலிஸார் நடத்திய தாக்குதல்: வலுப்பெறும் தனித் தமிழீழ கோரிக்கை

கிழக்கு மாகாண ஆளுனர் சிங்கள அரசுகளுக்காக வேலை செய்வதை விடுத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை பாருங்கள்.

இன்று நடைபெற்றது போன்றுதான் ஒடுக்குமுறை ஒரு சுதந்திர தினத்திலும் எங்களுக்கு ஏற்படவில்லை.முன்னர் பேசும் சுதந்திரம் இருந்தது. இன்று அதுவும் அற்ற நிலைமையே காணப்படுகின்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க உறுப்பினர்கள் மீது அச்சுறுத்தல் | Eastern Province Missing Relations Association

வீட்டிலிருந்து கள்ளர்களைப்போன்று ஒழிந்து திரியும் நிலைமையினை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

எங்களுக்காக நியாயமான நீதி கிடைக்கவேண்டும். அதற்காக சர்வதேச நாடுகள் இணைந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றிக்கு எமது பிரச்சினைகளை கொண்டுசென்று எங்களது உறவுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சவப்பெட்டியுடன் பொரளை மயானத்திற்குள் நுழைந்த மேர்வின் சில்வா

சவப்பெட்டியுடன் பொரளை மயானத்திற்குள் நுழைந்த மேர்வின் சில்வா

வீண்விரய செலவீனங்களை தவிர்க்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை

வீண்விரய செலவீனங்களை தவிர்க்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US