ரணில் சர்வதேச அரங்கில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு வேட்டை! அருட்தந்தை மா.சத்திவேல்

2019 Sri Lanka Easter bombings Ranil Wickremesinghe Easter Attack Sri Lanka Sri Lankan political crisis
By Shan Oct 05, 2023 04:29 PM GMT
Report

ஜனாதிபதி சர்வதேச விசாரணை இல்லை என்பதன் மூலம் தமிழர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தின குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் காட்டிய முகம் மிக கொடூரமானது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (05.10.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மையில் ஜேர்மன் நாட்டு ஊடகவியலாளர் ஒருவர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேட்டி கண்டபோது ஜனாதிபதி வீதியோர சண்டியன் மற்றும் பாதாள உலக முகத்தையும் வேறும் பல முகங்களையும் வெளிப்படுத்தி உள்ளார்.

நீதிபதி சரவணராஜாவின் முடிவு சரி! சலசலப்பை ஏற்படுத்திய பெரும் சிக்கல்(Video)

நீதிபதி சரவணராஜாவின் முடிவு சரி! சலசலப்பை ஏற்படுத்திய பெரும் சிக்கல்(Video)

சர்வதேச விசாரணை இல்லை

அதில் குறிப்பாக சர்வதேச மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையினை புறந்தள்ளி எந்த விடயம் தொடர்பிலும் சர்வதேச விசாரணை இல்லை என்பதன் மூலம் தமிழர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தின குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் காட்டிய முகம் மிக மிக கொடூரமானது.

ரணில் சர்வதேச அரங்கில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு வேட்டை! அருட்தந்தை மா.சத்திவேல் | Easter Boom Attack And International Inquiry

எல்லா அரசியல்வாதிகளும் தனது தேர்தல் கால அரசியல் முகத்தினை தேர்தல் மேடைகளில் வெளிப்படுத்துவார்கள். ஆனால் இவர் சர்வதேச ஊடக சந்திப்பு ஒன்றினையும் உள்நாட்டு தேர்தல் வெற்றிக்கான மேடையாக்கி தான் யாருடைய காவலன் என வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழர்களே உங்கள் வாக்குகள் இனி எனக்கு வேண்டாம் எனும் செய்தி மிக ஆழமானது. தற்போதைய ஜனாதிபதியே விடுதலை இயக்கத்தை உடைத்த முதல் பிரதானி.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க முன்வைத்த அரசியல் தீர்வு திட்டத்தை நாடாளுமன்றத்திலேயே கொளுத்தியவர். இவரே 2009 இனப்படுகொலை பின்னால் உந்து சக்தியாகவும் செயற்பட்டவர். தமது நல்லாட்சி முகத்தோடு ஆணை குழு அமைத்து அரசியல் தீர்வு யோசனைகளை பெற்று நாடகமாடியவர்.

சனல் 4 தொடர்பில் ஏன் பதில் வழங்க வேண்டும் : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரணிலின் கேள்வி(Video)

சனல் 4 தொடர்பில் ஏன் பதில் வழங்க வேண்டும் : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரணிலின் கேள்வி(Video)

தேர்தலுக்கான வாக்கு வேட்டை

தற்போது ஜனாதிபதியாக பதவிக்கு வந்ததும் காணாமல் ஆக்கப்பட்டோர் என ஒருவரும் இல்லையென்றதோடு இனப்பிரச்சனை காண கலந்துரையாடல்கள் என தமிழ் தலைவர்களை அழைத்து ஏமாற்றி அரசியல் யாப்பின் 13 ஆம் திருத்தமே தீர்வு என இந்திய சார்பு முகம் காட்டி சிங்கள இனவாத புத்த பிக்குகளை திரை மறைவில் தூண்டி விட்டு அவர்களை வீதியிலே இறக்கி 13 நகல் யாப்பினை வீதியிலே எரிக்கச் செய்தார்.

தற்போது உண்மை முகத்தை வெளிப்படுத்தி உள்ளார். இனி இந்த நாட்டில் தமிழர்களுக்கு எத்தகைய நீதியும் கிடைக்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.

தமிழர்களை பொறுத்தவரையில் இந்தியா உட்பட வல்லரசுகளையும் உள்ளடக்கிய 30க்கு மேற்பட்ட நாடுகள் யுத்த குற்றவாளிகள் அதனால் தான் தனது குற்றங்களை மறைக்கவும் அரசியல் பொருளாதார தேவைகளுக்காகவும் இனப்படுகொலை தொடர்பில் இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தாமல் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்க அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரணில் தனது அடுத்த வருட ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு வேட்டையை மேற்கு நாடு ஒன்றிலிருந்தே ஆரம்பித்துள்ளார்.

ரணில் சர்வதேச அரங்கில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு வேட்டை! அருட்தந்தை மா.சத்திவேல் | Easter Boom Attack And International Inquiry

உயிர்ப்பு ஞாயிறு குண்டு தாக்குதல் வேளையில் தம் கடமையை நிறைவேற்ற தவறிய நல்லாட்சி ஜனாதிபதி அதற்கான தண்டனையை அனுபவித்துக் கொண்டே சர்வதேச விசாரணை வேண்டாம், உள்நாட்டு விசாரணை போதும் என்பது நம்முடைய குற்றத்திலிருந்து மீளவும், யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை தடுத்து நிறுத்தவும் அடுத்த தேர்தலுக்கான ஆயத்தமாகவுமே.

இதே வழியை காட்டினாலும் பின்பற்றி குற்றத்தை ஒப்புக்கொண்டால் மன்னிப்பு என வெளிப்படையாகவே அறிவித்ததோடு சர்வதேச விசாரணை தேவையில்லை என அரசியல் குத்து கரணம் அடித்துள்ளார். ரணிலும் தமது அரசியலுக்காக குற்றவாளிகளின் பக்கம் சாய்ந்து சர்வதேச ஊடக மேடையில் நின்று எத்தகைய சர்வதேச விசாரணை இல்லை என்பது தேர்தல் வாக்கு வேட்டை அன்றி வேறில்லை.

ரணில் சர்வதேச அரங்கில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு வேட்டை! அருட்தந்தை மா.சத்திவேல் | Easter Boom Attack And International Inquiry

சிங்கள பௌத்த வாக்கு

தெற்கின் மக்களுக்கும் வீதியில் நின்று போராடுவோரின் குடும்பங்களுக்கும் உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி விட்டால் அமைதியாகி விடுவார்கள் என்பது கடந்த ஒரு வருட காலத்தில் அனுபவ ரீதியாக அறிந்தவர் போர் குற்றங்களையும் உள்ளடக்கி சர்வதேச விசாரணை தேவையில் இல்லை என்பதன் மூலம் அனைத்து அரசியல் கொலையாளிகள், பொருளாதார கொலையாளிகள் வாக்குகளாலும் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளாலும் அடுத்த தேர்தலில் ஜனாதிபதியாகிவிடலாம் என்பதுவே ரணிலின் திட்டம்.

மேற்குலகில் தெரிவாக இருக்கும் ரணில் ஒரே நேரத்தில் இந்தியாவையும் சீனாவையும் சமாளித்துக் கொண்டு முன் நகர்பவர் கோத்தாபய ராஜபக்சவை போன்று சிங்கள பௌத்த வாக்குகளோடு தனது ஜனாதிபதி கனவை நினைவாக்க முயற்சிக்கின்றார். இது நாடு அபாயகரமான காலத்தை நோக்கி தள்ளப்படுகின்றது என்பதையே தெளிவுபடுத்துகின்றது.

யாழ்.பல்கலை மருத்துவ பீட மாணவியை காணவில்லை: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

யாழ்.பல்கலை மருத்துவ பீட மாணவியை காணவில்லை: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

வடகிழக்கிலும் மலையத்திலும் வாழும் தமிழர்களுக்கு எதிர்காலம் நலமாக அமையப் போவதில்லை என்பதை தமிழ் தலைமைகள் உணர்ந்து சுகபோக அரசியலுக்கு அப்பால், அரோகரா கோசங்களுக்கு அப்பால் மக்கள் சக்தியை பலப்படுத்தும் கூட்டு முயற்சிக்கு உடன்படல் வேண்டும்.

இல்லையெனில் எதிர்காலத்தில் இருப்பதை இழந்து ஒட்டுமொத்த தமிழர்களும் இனமாக அரசியல் ரீதியில் ஆண்டியாக நிற்க வேண்டிய நிலையே ஏற்படும். வீதி போராட்டங்களுக்கு அப்பால் அரோகரா கோசங்களுக்கு அப்பால் மக்கள் சக்தி யோடு அரசியல் பயணத்தை தொடங்க தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்று கூடி அரசியல் அபிலாசைகள் விட்டு விலகாது பயணிக்க வேண்டும்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை விவகாரத்துடன் தொடர்புடைய கஜன் மாமா திடீர் மரணம்

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை விவகாரத்துடன் தொடர்புடைய கஜன் மாமா திடீர் மரணம்

இலங்கையர்களுக்கு ஏற்படவுள்ள பெரும் ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையர்களுக்கு ஏற்படவுள்ள பெரும் ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

மூதூர், காந்திநகர்

15 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புளியங்குளம், Scarborough, Canada

15 Mar, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, நீர்கொழும்பு

16 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US