தாஜ் சமுத்திரா ஹோட்டல் தப்பியது எப்படி! பிரிகேடியர் சுரேஷ் சலேயின் முடிவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் குற்றவாளிகள் வெளிப்படுத்தப்படுவார்கள், இது தொடர்பான முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தொடர்ச்சியாக கூறி வருகின்றார்.
தாஜ் சமுத்திரா ஹோட்டலில் குண்டு வெடிக்க வந்த குண்டுதாரி அங்கு வந்து தொலைபேசி அழைப்பெடுத்து பேசியதன் பின்னர் அங்கு குண்டை வெடிக்க விடாமல் அங்கிருந்து விலகிச்சென்று வேறொரு இடத்தில் வெடிக்க வைத்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இந்த விடயங்களை பற்றி செவ்வி வழங்கியிருந்த அசாத் மௌலானா , பிரிகேடியர் சுரேஷ் சலே தனக்கு அழைப்பெடுத்து தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இருந்தவரை அங்கிருந்து அனுப்புமாறு பணித்ததாகவும், தன்னால் அதை உடனடியாக செய்ய முடியாமல் போனதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த விடயங்களை வைத்து பார்க்கும் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் இலங்கையின் ஆட்சி மட்டத்தில் உள்ளவர்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக அறிய முடிகின்றது என்று கனடா அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
