குண்டுதாரிகளை கைது செய்ய ரணில் எடுத்த நடவடிக்கை: அதற்குள் நேர்ந்த அசம்பாவிதம்

Sri Lanka Bomb Blast Ranil Wickremesinghe Easter Attack Sri Lanka Vajira Abeywardena Channel 4 Easter Attack
By Benat Sep 23, 2023 09:09 AM GMT
Report

ரணில் விக்ரமசிங்க பிரதமர் காரியாலயத்துக்கு அனைத்து அதிகாரிகளையும் அழைத்து கலந்துரையாடி எஞ்சிய குண்டுதாரிகளை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்தபோது குண்டுதாரிகள் அனைவரும் குண்டை வெடிக்கவைத்துக்கொண்டனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற  உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

சஹ்ரானுடன் தொடர்புடையவர்கள் தென்னிந்தியாவில்! அரசியல்வாதி ஒருவரை படுகொலை செய்யும் நிலைப்பாடு

சஹ்ரானுடன் தொடர்புடையவர்கள் தென்னிந்தியாவில்! அரசியல்வாதி ஒருவரை படுகொலை செய்யும் நிலைப்பாடு

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஐ.எஸ். அமைப்பில் பயிற்சிபெற்றவர்கள் நாட்டுக்குள் இருப்பதாக நான் தெரிவித்ததாக இந்த சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தெரிவித்திருந்தனர். அவ்வாறானதொரு விடயத்தை நான் தெரிவிக்கவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

20 நிமிடம் வரை காத்திருந்த ரணில் 

அத்துடன் ஈஸ்டர் குண்டு வெடிப்பு இடம்பெற்ற பின்னர் பாதுகாப்பு சபையில் கலந்துகொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு சென்ற அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுமார் 20 நிமிடங்கள்வரை வெளியில் அறை ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

குண்டுதாரிகளை கைது செய்ய ரணில் எடுத்த நடவடிக்கை: அதற்குள் நேர்ந்த அசம்பாவிதம் | Easter Attack Sri Lanka 2019

அப்போது நானும் அவருடன் சென்றிருந்தேன். பிரதமர் அங்கு வந்திருப்பதை அறிந்த பாதுகாப்பு தரப்பின் சிலர் அங்கு வந்து, சிறிது நேரம் இருக்குமாறு தெரிவித்திருந்தனர்.

அப்போது பாதுகாப்பு சபை கூட்டத்தில் முப்படைகளின் தளபதி, பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட பல அதிகாரிகள் இருந்தனர்.

ஆனால் அரசியல்வாதிகள் யாரும் இருக்கவில்லை. பின்னர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் காரியாலயத்துக்கு அனைத்து அதிகாரிகளையும் அழைத்து கலந்துரையாடி எஞ்சிய குண்டுதாரிகளை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்தபோது குண்டுதாரிகள் அனைவரும் குண்டை வெடிக்கவைத்துக்கொண்டனர்.

அத்துடன் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பல விடயங்களை தெரிவித்திருந்தார்.

இந்த விடயங்களை அவர் விரும்பினால் மேல் நீதிமன்ற மூன்றுபேர் கொண்டு விசாரணைக்குழுவுக்கு வழங்க முடியும். அவ்வாறு வழங்கினால் அந்த விடயங்கள் விசாரணைக்கு முக்கியமாக இருக்கும்.

அத்துடன் புலனாய்வு பிரிவு தொடர்பாக அரசியல்வாதிகள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஒருசில அரசியல்வாதிகளின் பேச்சுக்களை பார்க்கும் பயங்கரவாதிகளும் உலகத்தாரும் சிரிக்கிறார்கள்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்தை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. ஏனெனில் நாங்கள் இதுதொடர்பாக விவாதித்து பிளவுபட்டுக்கொள்வதன் அழிவடையப்போவது இந்த தேசியமாகும் என குறிப்பிட்டார். 

கோழி இறைச்சி விலை 850 ரூபா வரை குறையும்: வர்த்தக அமைச்சு தகவல்

கோழி இறைச்சி விலை 850 ரூபா வரை குறையும்: வர்த்தக அமைச்சு தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் புதிய அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் புதிய அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பில் முடிவை மாற்றிக்கொண்ட மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பில் முடிவை மாற்றிக்கொண்ட மைத்திரி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US