உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சந்தேக நபர்கள் ஐவரிடம் மீண்டும் விசாரணை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐவரிடம் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்ட மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் விளக்கமறியலில் இருக்கும் போதே பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
அதன் பின் சந்தேக நபர்களை நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
தொடரும் விசாரணைகள்

காத்தான்குடியைச் சேர்ந்த ஆதம்லெப்பை அஹ்மத் அர்ஹம், முஹம்மது றபீக் ரிஸ்வான், முஹம்மது மொஹிதீன் முஹம்மது ரிஸ்வான், அப்துல் அசீஸ் ரியாசத் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஆதம்பாவா யாகூப் ஆகியோரே இவ்வாறு தடுப்புக் காவல் உத்தரவு விதிக்கப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக இவர்கள் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 11ம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் இவர்களிடம் மறுவிசாரணை நடத்த சட்ட மா அதிபர் தீர்மானித்தமைக்கு அமைவாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தற்போது இவர்களிடம் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
| காலிமுகத்திடல் தாக்குதல்: பொரலஸ்கமுவ நகர சபைத் தலைவரும் கைது |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 12 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri