காலிமுகத்திடல் தாக்குதல்: பொரலஸ்கமுவ நகர சபைத் தலைவரும் கைது
பொரலஸ்கமுவ நகர சபைத் தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டமைக்கான காரணம்
கடந்த 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரதிந்து சேனாரத்னவும் கைது
அத்துடன் காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளரான ரெட்டா எனப்படும் ரதிந்து சேனாரத்னவும் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.