உள்ளே வந்தால் சங்கடப்படுவீர்கள் என அசாத் மௌலானாவிடம் கூறினேன்: நாடாளுமன்றத்தில் அறிவித்த பிள்ளையான்

Sri Lanka Bomb Blast 2019 Sri Lanka Easter bombings Parliament of Sri Lanka Sivanesathurai Santhirakanthan Channel 4 Easter Attack
By Benat Sep 22, 2023 12:55 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஆணைக்குழுவிற்கு நான் வாக்குமூலம் வழங்கச் சென்றபோது என்னுடன் அசாத் மௌலானாவும் வருகைத் தந்திருந்தார்.  அப்போது அவரிடம் நான்  “உள்ளே வரவேண்டாம் அசாத், வந்தால் சங்கடப் படுவீர்கள். எனவே வெளியே காத்திருங்கள்” என்று சொன்னேன் என  பிள்ளையான் எனப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

கிழக்கின் முக்கிய கொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பில் அசாத் மௌலானா மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள்

கிழக்கின் முக்கிய கொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பில் அசாத் மௌலானா மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் 260இற்கும் மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. 500இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவருக்கும் எனது கவலையை தெரிவித்து கொள்கின்றேன்.


இந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையைக் கொண்டு வந்த நிரோஷன் பெரேரா என்னுடைய பெயரை எல்லாம் சொல்லி கருத்துக்களை முன்வைத்திருந்தார். நான் நினைக்கின்றேன், அவருக்கு என்னைக் குறித்து பேசுவதற்கான தனிப்பட்ட ரீதியில் என்மீது குற்றச் சாட்டுக்களை சுமத்துவதற்கான தேவை அவருக்கு இல்லை என்று நினைக்கின்றேன்.

இருந்தாலும் அவருடைய கட்சிக்காரர் நளின் பண்டார அவர்கள் என்னுடை பெயரை பலமுறை தேவையில்லாமல், நாகரீகம் இல்லாமல் பயன்படுத்தினார்.

சிறையில் விலங்கிடப்பட்டு கிடந்தேன்..

நளின் பண்டார ஒரு இடத்தில் என்னை மினி மருவா என்றெல்லாம் சொல்லியிருக்கின்றார்.

உண்மையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் என்னை இணைத்து பல செய்திகள் வெளிவந்திருப்பதை இட்டு நான் கவலை அடைகின்றேன். இதற்கான விளக்கங்களை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நான் நிற்கின்றேன்.

உண்மையில் சனல் 4 காணொளியில், என்னுடை செயலாளராக இருந்த அசாத் மௌலானா, தஞ்சம் கோருவதற்காக சொல்லியிருக்கும் அனைத்து விடயங்களையும் நான் மறுக்கின்றேன்.

இது மிகப் பெரிய பழியாக என்மீது விழுவதற்கான வாய்ப்பை அவர் ஏற்படுத்தியிருக்கின்றார்.

உள்ளே வந்தால் சங்கடப்படுவீர்கள் என அசாத் மௌலானாவிடம் கூறினேன்: நாடாளுமன்றத்தில் அறிவித்த பிள்ளையான் | Easter Attack Pillaiyan Team

உண்மையில் சனல் 4 நிறுவனம் பிரித்தானியாவில் இருந்தாலும் கூட அதற்கு நிதி வழங்கி நடத்துபவர்கள் யார் என்பது தெரியவேண்டும்..

நிச்சயமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதையே நானும் எண்ணுகின்றேன்.

கத்தோலிக்க மதத் தலைவரான கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களுக்கும், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நான் ஒரு விடயத்தை தெளிவாகச் சொல்ல வேண்டும். எனது மட்டக்களப்பு மாவட்டத்தில் தான் சியோன் தேவாலயம் உள்ளது. அந்த சியோன் தேவாலயத்திலும் குண்டுகள் வெடித்தது.

அங்கு 32 உயிரிழப்புக்கள் ஏற்பட்டு மிக அதிகமானவர்கள் காயமடைந்தார்கள். அந்த சம்பவம் நடந்தபோது நான் பக்கத்தில் உள்ள சிறையில் கைவிலங்கிடப்பட்டு அடைக்கப்பட்டு கிடந்தேன். அங்கு சத்தமும் புகைகளும், வைத்தியசாலைக்குச் செல்லும் அம்பியூலன்ஸ் சத்தங்களும் என்னுடைய காதை துளைத்தது.

ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா (Photos)

ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா (Photos)

அங்கிருந்து வந்த ஓலங்களும் கண்ணீரையும் பார்த்து என்னால் பொறுக்க முடியவில்லை. நான் அந்த நேரத்தில் எண்ணினேன், என்னால் இரத்தம் கொடுக்க முடியவில்லை. ஒரு குழந்தையை தூக்கி வாகனத்தில் ஏற்ற முடியவில்லை என மிகவும் வருந்தினேன்.

அதன் பின்னர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு வந்து இரண்டு முறை என்னுடைய வாக்குமூலங்களை நான் வழங்கியுள்ளேன்.

எப்படியென்றால், நான் சிறைச்சாலையில் இருக்கும் போது என்னுடன் பழகிய கடும் போக்குவாதிகளின் கருத்து என்ன என்பது தொடர்பில் என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

அதில் கவலையான விடயம் என்னவென்றால், இந்த ஆணைக்குழுக்களுக்குச் செல்லும் போது அசாத் மௌலானாவும் என்னுடன் வந்தார்.

இஸ்லாம் மதத்தை தழுவியவர் என்ற அடிப்படையிலே கௌரவமாக நான் அவரிடம் சொன்னேன்.. அசாத் நீங்கள் உள்ளே வந்தால் சங்கடப் படுவீர்கள் வெளியில் இருங்கள் என்று சொன்னேன்.

அதேபோன்றுதான் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத்  மௌலானாவின் நோக்கம் வெற்றிப் பெற்றிருக்கின்றது. அவர் பிரபலமடைந்திருக்கின்றார்.  அவருக்கு நிதி வழங்கப்பட்டிருக்கின்றது. அவர் வெளிநாட்டில் வாழக்கூடிய நிலையை உறுதிப்படுத்தியிருக்கின்றார். 

அசாத் மௌலானா உண்மையிலேயே ஒரு போலியான, சுத்துமாத்து கதைகளை சொல்லுகின்ற ஒரு நபராக இருக்கின்றார் என குறிப்பிட்டார். 

விசாரணை அதிகாரிகள் 31 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்த கோட்டாபய: அம்பலப்படுத்திய சஜித்

விசாரணை அதிகாரிகள் 31 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்த கோட்டாபய: அம்பலப்படுத்திய சஜித்

வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி

வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US