இலங்கை அரசாங்கம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் அதிருப்தி வெளியிட்ட கர்தினால்
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற சில மிலேச்சத்தனமான தாக்குதல்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவயைின் 55 ஆம் அமர்வுகளில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
நேர்மையான விசாரணைகள்
மேற்குறிப்பிட்ட தாக்குதல்கள் குறித்த மெய்யான தகவல்களை வெளிப்படுத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவங்கள் குறித்து கிரமமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென விடுக்கப்படும் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்களுக்காக நீதி வேண்டி குரல் கொடுக்கும் தரப்புக்கள் சிறையில் அடைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற நேர்மையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கர்தினால், ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
