ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்! சற்று முன்னர் கோட்டாபயவுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பயணத் தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
அவருடன் இணைத்து மேலும் இரு உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவ கர்னல் அதிகாரி முகமது அன்சார் மற்றும் சில்வா என அழைக்கப்படும் முன்னாள் புலனாய்வு அதிகாரியான பிரேமானந்த உடலகம ஆகியோருக்கே இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத் தடை
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக குறித்த மூவருக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் உயர் இராணுவ அதிகாரிகள் இருவர் உள்ளடங்களாக மூவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் பயணத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan