ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: அனுமதி கோரிய பூஜித ஜயசுந்தரவை நிராகரித்த கொழும்பு மேல் நீதிமன்றம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தவறியமை மற்றும் குற்றவியல் ரீதியான கவனயீனம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், அவரது கோரிக்கையொன்றைக் கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த வழக்கு நேற்று(24.04.2026) நீதியரசர் பிரியந்த லியனகே தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பூஜித ஜயசுந்தர விடுத்த கோரிக்கை தொடர்பிலான கட்டளையை வழங்கிய நீதிபதிகள் குழாம், அதனை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.
பூஜித ஜயசுந்தரவின் கோரிக்கை நிராகரிப்பு

பூஜித ஜயசுந்தர சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரொஷான் தெஹிவல நீதிமன்றில்,
"எனது கட்சிக்காரர் பூஜித ஜயசுந்தர ஏற்கனவே வழங்கிய கூண்டுப் பிரகடனத்தில் இரண்டு முக்கிய விடயங்களைத் தற்செயலாகத் தவறவிட்டுள்ளார்.
எனவே, அந்த விடயங்களை மீண்டும் புதிய உண்மைகளாகச் சேர்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்" என கோரிக்கை முன்வைத்துள்ளார்.
முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் கடமையைச் செய்யத் தவறியமைக்காகப் பூஜித ஜயசுந்தரவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும், ஏற்கனவே வழங்கப்பட்ட கூண்டுப் பிரகடனத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நீதிமன்றம் இதன்போது இடமளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனனியை முடித்துவிட பிளான் போட்ட குணசேகரன், ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam