வெளிநாட்டில் மாநாட்டுக்காக செல்ல நிதி அமைச்சின் அதிகாரிகள் இருவருக்கு அனுமதி மறுப்பு
கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு மாநாட்டுக்காக செல்வதற்கு, தமது அமைச்சின் கீழ் வரும் ஒரு நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் இருவருக்கு இலங்கையின் நிதி அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் காரணமாக இந்தப் பயணத்தை அங்கீகரிக்க முடியாது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார வகுப்பு திட்டம்
அத்துடன் வணிக வகுப்பில் அதிகாரிகள் வெளிநாடு செல்வதற்கான விமான அனுமதிச்சீட்டுக்களை வாங்குவதற்கு அரச நிதியை வெளியிட முடியாது என்பதையும் அமைச்சு தெரியப்படுத்தியுள்ளது.
எனினும் குறித்த அதிகாரிகள் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர். தாங்கள் வணிக வகுப்பில் பயணம் செய்ய விரும்பவில்லை என்றும், சொந்த வளங்களைப் பயன்படுத்தி பொருளாதார வகுப்பில் பயணிக்க திட்டமிட்டுள்ளதாக அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும் அத்தகைய பயணம் தேவையற்றது என்ற அடிப்படையில், அவர்களின் மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டது தகவல்கள் வெளியாகியுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 21 மணி நேரம் முன்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri