250 வருடங்களுக்கு பிறகு தேசிய பறவையை தீர்மானித்த அமெரிக்கா
அமெரிக்காவின் அதிகாரபூர்வ தேசிய பறவையாக கழுகை தேர்தெடுப்பதற்கான மசோதாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் கையெழுத்திட்டுள்ளார்.
1782ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் தேசிய சின்னமாக உள்ள கழுகு, முக்கிய ஆவணங்களில் குத்தப்படும் முத்திரையாகவும் உள்ளது.
எனினும், அமெரிக்காவின் அதிகாரபூர்வ தேசிய பறவையாக கழுகு இதுவரை அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை.
கையெழுத்திட்ட பைடன்
இவ்வாறான பின்னணியில், கழுகை தேசிய பறவையாக அங்கீகரிக்கும் மசோதா ஒன்று கடந்த வாரம் காங்கிரஸால் முன்வைக்கப்பட்டு பைடனின் கையெழுத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, கிறிஸ்துமஸின் முந்தையநாள் கொண்டாட்டத்தினை முன்னிட்டு குறித்த மசோதாவில் பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
இந்நிலையில், 250 வருடங்களாக தேசிய பறவையாக கருதப்பட்ட கழுகு, தற்போது உத்தியோகபூர்வமாகியுள்ளது என தேசிய பறவை முன்முயற்சியின் இணைத் தலைவர் ஜெக் டேவிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
