துபாயில் அனாதையாக வீதியில் உயிரிழந்து கிடந்த தமிழர்! முகம் தெரியாத உறவுகள் செய்த நெகிழ்ச்சியான செயல்
துபாயில் 28 நாட்களாக அனாதையாக வீதியில் உயிரிழந்து கிடந்த தமிழர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - தேனி மாவட்டத்தினை சேர்ந்த 38 வயதான காமராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடும் வறுமை காரணமாக சுற்றுலா வீசா மூலம் துபாய் சென்ற இவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக வீதியில் அனாதையாக உயிரிழந்து கிடந்துள்ளார்.
நெகிழ்ச்சியான செயல்
இதனை தொடர்ந்து அவரின் உடலை மீட்ட துபாய் பொலிஸார் இவர் தொடர்பிலான தகவல் தெரியாமல் குழம்பியுள்னர்.
40 நாட்களின் பின்னர் இவரின் கடவுச்சீட்டு கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் அதனை ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டு உயிரிழந்தவரின் விபரங்களை திரட்டி தருமாறு உதவிகோரியுள்ளார்.
இதனை தொடர்ந்து முகம் தெரியாத பல முகநூல் உறவுகளின் உதவியுடன் நீண்ட போராட்டத்தின் பின்னர் உடலினை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
