சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு

Government Of Sri Lanka Sri Lankan Peoples Weather
By Sajithra Dec 01, 2024 11:15 PM GMT
Report
Courtesy: H A Roshan

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்த குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன. 

திருகோணமலை 

அந்தவகையில், தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதலுக்கிணங்க (30) குறித்த உலர் உணவுப் பொதிகளை  அரச சார்பற்ற நிறுவனமான முஸ்லிம் எயிட்  ஊடாக வழங்கி வைக்கப்பட்டன. 

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு | Dry Food Packages To Families Affected Bad Weather

இதில் தம்பலகாமம், கோயிலடி, புதுக்குடியிருப்பு, பாலம்போட்டாறு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த சுமார் 100 குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 

செய்தி - ரோசன் 

c

நுவரெலியா 

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான உலர் உணவு பொருட்களையும் வழங்கி வைத்தார்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு | Dry Food Packages To Families Affected Bad Weather

இதில் முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான டிக்கோயா, பொகவந்தலாவ, அக்கரபத்தனை ஆகிய பகுதி மக்களுக்கான நிவாரண பொதிகள் நேற்றைய தினம் (30) வழங்கி வைக்கப்பட்டன.

செய்தி - கிஷாந்தன் 

வடமராட்சி 

வடமராட்சி - கெருடா தெற்கு நற்பணி மன்றத்தால் ஒரு தொகை உலர் உணவு பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று 1.12.2024 வழங்கிவைக்கப்பட்டன.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு | Dry Food Packages To Families Affected Bad Weather

கெருடா நற்பணி மன்றத்தில் கல்வி கற்கும் மாணவர்களை அடிப்படையாக கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவர்களின் 200 குடும்பங்களுக்கே இவ் உதவி வழங்கி வைக்கப்பட்டது. 

செய்தி - எரிமலை 

ஏறாவூர் 

ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் மகேஷ் திக்சனாவின் இரண்டு இலட்சம் ரூபாவில் நிதியுதவியுடன் ஏறாவூர் யங் ஹீரோ விளையாட்டு கழகம் 100 பொதிகளை வழங்கிவைத்தது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு | Dry Food Packages To Families Affected Bad Weather

செய்தி - பவன் 

மன்னார் 

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 812 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 681 நபர்கள் ஞாயிற்றுக்கிழமை (1) வரை 28 நலன்புரி நிலையங்களில் இருந்து வருவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு | Dry Food Packages To Families Affected Bad Weather

கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் சனிக்கிழமை (30) வரை மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 19 ஆயிரத்து 811 குடும்பங்களைச் சேர்ந்த 68 ஆயிரத்து 334 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

செய்தி - ஆஷிக்  

அம்பாறை 

மார்க்கண்டு முதலாளியின் சமூக அறக்கட்டளை, ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்த ஜீயின் 121 வது ஜனன தினத்தினை முன்னிட்டு காரைதீவு 7ஆம் பிரிவில் 60 குடும்பங்களுக்கு 2000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் விபுலானந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் வைத்த வழங்கி வைத்தனர். 

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு | Dry Food Packages To Families Affected Bad Weather

செய்தி - ஷிஹான் 

மட்டக்களப்பு 

அதேவேளை, மட்டக்களப்பில் இறால்வளர்ப்பு பண்ணைகள் இருந்து சுமார் 30 கோடி ரூபா பெறு 10 இலட்சம் இறால்கள் வெள்ளத்தினால் மட்டக்களப்பு வாவிக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு | Dry Food Packages To Families Affected Bad Weather

எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்குமாறு இறால் வளர்ப்பு பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுணதீவு பிரதேச செயலக பிரிவிலுள்ள கரையாக்கன்தீவு பகுதியில் 20 இறால் வளர்ப்பு பண்ணைகள் கடந்த 26ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் இறால் பிடிக்கும் தறுவாயில் இருந்த இறால்கள் அடித்து செல்லப்பட்டு அருகிலுள்ள ஆறுகளுக்குள் அடித்துச் சென்றுள்ளன. 

செய்தி - பவன் 

மன்னார்  

மன்னாரிற்கு ஞாயிற்றுக்கிழமை (1) விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் மேற்கொண்டார்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு | Dry Food Packages To Families Affected Bad Weather

இதன்போது எழுத்தூர் பாடசாலை, செல்வநகர் ஆலய மண்டபம் போன்ற இடங்களில் தங்கியிருந்த மக்களையும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களை பார்வையிட்டு அவர்களுக்கு உலர் உணவு பொதியையும் வழங்கி வைத்தார். 

செய்தி -  ஆஷிக்
   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Markham, Canada

22 May, 2016
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு

06 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US