இலங்கையில் அதிகரித்துள்ள மரணங்கள்: வெளியான அதிர்ச்சி காரணம்
இலங்கையில் மது அருந்திய நிலையில், தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை உளவியல் மருத்துவ விஞ்ஞான சங்கத்தின் தலைவர், மருத்துவ நிபுணர் சஜீவன அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சுயநினைவற்ற முடிவுகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் காரணமாக மக்களுக்குள் தவறான முடிவுகளை எடுக்கும் எண்ணங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறிப்பாக 15 முதல் 19 வயதுக்குள் உள்ள இளைஞர்களை அதிகமாக பாதிக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தவறான முடிவு
தவறான முடிவுள் தொடர்பில் பொறுப்புடன் செய்தி அறிக்கையிடல் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற ஊடகவியலாளர்களை தெளிவூட்டும் செயலமர்வில் உரையாற்றிய அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இந்த செயலமர்வு நடைபெற்றிருந்தது.
உலகளவில் ஆண்டுக்கு 7 இலட்சம் பேர் தவறான முடிவுகளால் உயிரை மாய்த்துக்கொள்வதாகவும், இலங்கை உலக தரவரிசையில் இரண்டாம் நிலைக்கு அருகில் உள்ள நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
“2020 ஆம் ஆண்டில் மட்டும் 1,909 பேர் தூக்கிட்டு தவறான முடிவை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இலங்கையில் ஒவ்வொரு ஒரு லட்சம் மக்களில் 14 பேர் தவறான முடிவை மேற்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு குறைபாடு
பொதுவாகவே ஆண்களில் தவறான முடிவை மேற்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக காணப்படுகிறது.
அதே நேரத்தில், தனியாக வாழும் மக்களிடையே தவறான முடிவை மேற்கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
திருமணமானவர்களிடையே இது குறைந்துள்ளதாகவும் ஆய்வுகள் காண்பிக்கின்றன.
தனிமை உணர்ச்சி, பொருளாதார பிரச்சினைகள், வேலைவாய்ப்பு குறைபாடு, மற்றும் சமூகத்தில் ஏற்படும் விமர்சனங்கள் போன்றவை இந்த எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கின்றன எனவும் மருத்துவர் சஜீவன அமரசிங்க எச்சரித்துள்ளார்.
சுகாதாரத்துறையைச் சார்ந்தவர்கள் மத்தியில் இற்த சம்பவங்கள்அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டில் 1909 பேர் இலங்கையில் தூக்கிட்டு தவறான முடிவை மேற்கொண்டுள்ளனர் என சஜீவன அமரசிங்க கூறியுள்ளார்.