போதைப்பொருளுடன் தொடர்புபடும் இராணுவம் தொடர்பில் சபையில் அம்பலமான தகவல்!
போதைப்பொருளுடன் தொடர்புடைய இராணுவத்தினர் கைது செய்யப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
போதைப்பொருள் பாவனை
மேலும் கூறுகையில், யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பாவனை, அதன் விநியோகம் மற்றும் வியாபாரம் என்பன பரந்துபட்டு காணப்படுவதாக கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கில் பரிபாலனம் செய்த காலங்களில் அங்கு போதைப்பொருள் பாவனை என்பது முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது.
போர் முடிந்த பின்னர் போதைப்பொருள் விநியோகம் என்பது முழுமூச்சாக நடைபெறுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் சிறிநேசன் தெரிவித்துள்ள கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்,