அதீத மதுபோதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதியால் சர்ச்சை
மது போதையில் கண்டியில் இருந்து ஹற்றன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சாரதியை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொண்டாட்ட நிகழ்வு ஒன்றில் நண்பர்களுடன் இணைந்து மது அருந்திய பின்னர் அவர் பேருந்தை இயக்கியமை தெரியவந்துள்ளது.
கண்டி தனியார் பேருந்து நிலையத்தின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உட்பட அறுவர் இணைந்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாலை வரை நடத்திய மதுபானக் கொண்டாட்டத்தின் பின்னர், இந்த சாரதி கடுமையான போதையில் பேருந்தைச் செலுத்தியுள்ளார்.
சாரதியால் சர்ச்சை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கினிகத்தேனை, கெனல்வத்தை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கம்பளை போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் கம்பளை, கஹட்டபிட்டிய பகுதியில் காலை வேளையில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த போது, இந்த சாரதி தொலைபேசி அழைப்பில் பேசியவாறே பேருந்தை அதிவேகமாகச் செலுத்திச் சென்றுள்ளார்.
இதனையடுத்து பேருந்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அவர் கடுமையான போதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri