திருகோணமலையில் கடற்படையினருக்குள் கடும் மோதல் - ஒருவர் படுகொலை
திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றும் 2 கடற்படை வீரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு சிப்பாய் மற்றைய சிப்பாயை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
கந்தேகெதர மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய கடற்படை சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் மார்பில் கத்திக்குத்து காயங்களுடன் நேற்று காலை திருகோணமலை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடற்படையினர் மோதல்
திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றும் நான்கு கடற்படையினர் தங்களுடைய விடுதியில் ஒன்றாக மதுபானம் அருந்தியதாகவும், அதற்கு முன்னதாக நால்வரில் இருவர் அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளனர்.
மற்ற இரண்டு கடற்படை வீரர்களுக்கு இடையே குடிபோதையில் மோதல் ஏற்பட்டு இறுதியில் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் கைது
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை இம்புல்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri