பல கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்: பொலிஸார் விசாரணை
பியகம மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளில் சுமார் 35 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பியகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்றிரவு (26) பண்டாரவத்த பகுதியில் மகிழுந்து ஒன்றை சோதனையிட்ட போது போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, 15 கிலோகிராம் 81 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 14 கிலோகிராம் 527 மில்லிகிராம் ஹேஷ் ரக போதைப்பொருள் மற்றும் 941 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
16 கோடி ரூபாய் போதைப்பொருள் மீட்பு
அதன்போது மகிழுந்தில் இருந்த கடுவலை - பொமிரிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, மஹரகம - நாவின்ன பகுதியில் 8 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 45 வயதுடைய ஒருவரெனவும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 16 கோடி ரூபாய் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
