போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்படுகிறதா..! உள நல வைத்தியர் பதில்
மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் புனர்வாழ்வு தவறானது என்று பரவும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது எனக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் உள நல வைத்தியர் ஜெயராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நேற்றைய தினம் (18.05.2023) இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்டத்தில் உளவளத்துணை மற்றும் உளவளத்துணை சார்ந்து பணிபுரிவோருடனான கலந்துரையாடலில் கருத்துகள் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து குறிப்பிடுகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் மது மற்றும் போதைவஸ்த்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தர்மபுரம் பகுதியில் 14 நாட்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டுவருகின்றது.
ஒரு வருட ஆய்வு
இவ்வாறு புனர்வாழ்வு பெற்றவர்கள் தொடர்பில் நாம் தொடர்ச்சியான கண்காணிப்பினை மேற்கொண்டு வருகின்றோம். புனர்வாழ்வு அழிக்கப்பட்ட பலர் சமூகத்துடன் இணைந்து ஒழுக்கத்துடன் வாழ்கின்றனர்.
புனர்வாழ்வு பெற்றவர்களில் 10 பேர் தொடர்பாக ஒருவருட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் மூவர் மது அருந்தாமலும், நால்வர் முன்பா விடக்குறைந்தளவு மது அருந்துபவர்களாகவும், இருவர் முன்பைவிட அதிகளவு மது அருந்துபவர்களாகவும் மேலும் ஒருவர் இயற்கை எய்தியவராகவோ அல்லது தகவல் பெற முடியாதவராகவோ உள்ளார்.
நல்வழிப்படுத்துவதற்கான செயற்பாடுகள்
சமூகத்தில் புனர்வாழ்வு பெற்றுத் திருந்தி வாழ்வோர் தொடர்பான தகவலை விடவும் புனர்வாழ்வு பெற்றவர்கள் அதிகம் குடிக்கின்றார்கள், இறக்கின்றார்கள் போன்ற தகவலே வேகமாகப் பரவிக்காணப்படுகின்றது.
இது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும். மது மற்றும் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் புனர்வாழ்வு பெறுவதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
எம்மிடமிருக்கும் வளங்களை கொண்டு போதைபொருள் பாவனைகளால் பாதிக்கப்பட்டவர்களை நல்வழிப்படுத்துவதற்கான செயற்பாடுகளையே மேற்கொள்கின்றோம் என்று உளநல வைத்திய அதிகாரி ஜெயராஜா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
