வெளிநாடு ஒன்றில் தலைமறைவான போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியாளர் இலங்கையில் கைது
வெளிநாடு ஒன்றில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரின் பிரதான உதவியாளர் ஒருவர் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கஞ்சா விநியோகிப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சுமார் எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான 25 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொட சாமர நிரோஷன் என்ற 47 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது கடுவெல வெலவிட்ட பகுதியில் உள்ள வீட்டில் மேலும் 23 கிலோ கஞ்சாவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது மற்றுமொரு நபருக்கு வழங்குவதற்காக இரண்டு கிலோ கேரள கஞ்சாவை சந்தேகநபர் வைத்திருந்தமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 10 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri
