மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு! புலம்பெயர்ந்தவர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை(Photos)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய புலம்பெயர் மக்கள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கனடிய தமிழர் பேரவையினால் ஒரு தொகை மருந்துப்பொருட்கள் இன்று(12.04.2023) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கனடாவில் நடை பவனி
கனடிய தமிழர் பேரவை கனடாவில் முன்னெடுத்த நடை பவனி மூலம் கிடைக்கப்பெற்ற நிதிகள் மூலம் இலங்கையில் உள்ள ஆறு வைத்தியசாலைகளுக்கு மருந்துப் பொருட்களை வழங்கவுள்ளது.
இதன் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பாரியளவில் மருந்து தட்டுப்பாடு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கீழ் உள்ள புற்றுநோயாளர்கள் வைத்தியசாலையில் பாரியளவில் மருந்து தட்டுப்பாடு காணப்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை மக்களுக்கு காணப்படுவதாகவும் இங்கு வைத்தியர்களினால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை குறைப்பதற்கான உதவியை வழங்கமுன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.கலாரஞ்சனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கனடிய தமிழர் பேரவை உறுப்பினர் துரைரெட்னம் துஸ்யந்தன் உட்பட வைத்தியர்கள்,வைத்தியின் பிரதிப்பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam
