போதைப்பொருள் வியாபாரி கைது
பொலன்னறுவை இருந்து காத்தான்குடி பிரதேசத்திற்குத் தனியார் பேருந்து வண்டியில் அபின் போதைப் பொருளை வியாபாரத்துக்காக எடுத்துச் சென்ற ஒருவரை காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று(14) இரவு கைது செய்த அவரிடமிருந்து 100 மில்லிக்கிராம் அபின் போதைப் பொருளை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பிரதேசத்தில் சனிக்கிழமை சிறியளவிலான அபின் போதைப் பொருளுடன் இருவரைக் கைது செய்து அவர்களிடமிருந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கதுருவெல முஸ்லிம் கொலனியை சேர்ந்த வியாபாரி ஒருவர் அபின் போதைப் பொருளை வழங்கி வருவதாகத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காத்தான்குடி ரெலிக்கோம் சந்தி பஸ்தரிப்பு நிலையத்தில் பெரும் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி வை.விஜயராஜா தலைமையிலான பொலிஸார் சம்பவதினமான நேற்று இரவு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது கொழும்பு அக்கரைப்பற்று பேருந்து வண்டியில் இருந்து இறங்கிய நபரை மடக்கிப் பிடித்துச் சோதனையிட்டபோது அவரிடமிருந்து 100 மில்லிகிராம் அபின் போதைப் பொருளை மீட்டதுடன், அவரை கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்தவரை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
