கொழும்பில் இருந்து மதுபோதையில் தொடருந்தினை செலுத்திய சாரதியினால் பரபரப்பு
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி இன்று (30) பயணத்தை ஆரம்பித்த தொடருந்தின் சாரதி அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்திவிட்டு அமைதியற்ற வகையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சாரதி, கண்டி நகருக்கு அருகில் சுதுஹும்பொல என்ற இடத்தில் தொடருந்தை நிறுத்திவிட்டு இறங்கி ஓடிய போது பயணிகள் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.
இந்நிலையில் உதவி சாரதி மூலம் கண்டி தொடருந்து நிலையம் நோக்கிதொடருந்து பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்புப்பிரிவினரிடம் சாரதியை ஒப்படைக்க நடவடிக்கை
இதனையடுத்து மதுபோதையில் இருந்த தொடருந்து சாரதியை தொடருந்து பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொடருந்து மதியம் 1.40 மணிக்கு கண்டியை வந்தடைய வேண்டும் என்ற நிலையில், மதியம் 2.30 மணிக்கு தொடருந்து நிலையத்தை வந்தடைந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri