அக்கராயன் பகுதியில் குடிநீர் பிரச்சினை: மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை (Video)
கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் நிலவும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் பிரச்சினை
அக்கராயன் பிரதேசத்திற்கு உட்பட்ட கோணாவில் யூனியன்குளம், அக்கராயன் மத்தி சுபாஸ் குடியிருப்பு, கெங்காதரன் குடியிருப்பு போன்ற குறிப்பிட்ட சில பகுதிகளில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

அண்மைய நாட்களாக நிலவிவரும் தொடர் வரட்சி காரணமாக கிணறுகளில் நீர்வற்றிக் காணப்படுவதுடன் சில கிணறுகளில் நீர் நிறம் மாறியும் உவர்த்தன்மை கொண்டும் காணப்படுகின்றது.
மக்களின் கவலை

இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது என்றும் தமக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரங்களை எதிர்கொள்வதாகவும் தமது பகுதிகளுக்கான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதேவேளை அண்மைய நாட்களாக நிலவும் கடும் வறட்சி காரணமாக பயன்தரும் மரங்கள் பல அழிவடையும் நிலையில் காணப்படுவதுடன் கால்நடைகளும் குடிநீர் தேடி அலையும் நிலையும் காணப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam