அக்கராயன் பகுதியில் குடிநீர் பிரச்சினை: மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை (Video)
கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் நிலவும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் பிரச்சினை
அக்கராயன் பிரதேசத்திற்கு உட்பட்ட கோணாவில் யூனியன்குளம், அக்கராயன் மத்தி சுபாஸ் குடியிருப்பு, கெங்காதரன் குடியிருப்பு போன்ற குறிப்பிட்ட சில பகுதிகளில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

அண்மைய நாட்களாக நிலவிவரும் தொடர் வரட்சி காரணமாக கிணறுகளில் நீர்வற்றிக் காணப்படுவதுடன் சில கிணறுகளில் நீர் நிறம் மாறியும் உவர்த்தன்மை கொண்டும் காணப்படுகின்றது.
மக்களின் கவலை

இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது என்றும் தமக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரங்களை எதிர்கொள்வதாகவும் தமது பகுதிகளுக்கான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதேவேளை அண்மைய நாட்களாக நிலவும் கடும் வறட்சி காரணமாக பயன்தரும் மரங்கள் பல அழிவடையும் நிலையில் காணப்படுவதுடன் கால்நடைகளும் குடிநீர் தேடி அலையும் நிலையும் காணப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri