பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வடிகாலின் தற்போதைய நிலை..
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் திட்டத்தில் சில வருடங்களுக்கு முன்பு மருதங்கேணியில் பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு பூர்த்தி செய்யப்படாமல் மண் கொண்டு மூடப்பட்டுள்ளது.
வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக கட்டப்பட்ட குறித்த வடிகால் அமைப்பு பூர்த்தி செய்யப்படாமல் பிரதேச செயலகத்தால் மண் கொண்டு மூடப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழப்பு அச்சம்
குறித்த கால்வாய் மூடப்பட்டுள்ளதால் வெள்ள நீர் தேங்கி நிற்பதுடன் வீடுகளுக்குள்ளும் சென்று மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

சிறுவர்களும் குறித்த பகுதியில் ஆபத்தான முறையில் விளையாடுவதால் உயிரிழப்பு அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
பல இலட்சம் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் முழுமை பெறாமல் இடையில் மண் கொண்டு மூடப்பட்டதால் வெள்ள நீர் வழிந்தோட இடம் இன்றி மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது ஒரு சில மாதங்களுக்கு முன்பு மருதங்கேணி பிரதேச செயலகம் பருத்தித்துறை பிரதேச சபையுடன் இணைந்து குறித்த வடிகாலை மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam