ஒன்றரை நிமிடங்களில் பேசி முடித்த அர்ச்சுனா
அர்ச்சுனா இராமநாதன் எம்.பி இன்று(23.09.2025) நாடாளுமன்றத்தில் ஒன்றரை நிமிடங்களில் தனது கேள்விகளை கேட்டு முடித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் தனது உரையை ஆரம்பிக்க முன்னரே சபாநாயகரிடம் தனக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது என்று கேட்ட பின்னரே உரையாற்ற ஆரம்பித்ததோடு, சபாநாயகர் அர்ச்சுனாவுக்கு ஒன்றரை நிமிடங்களே வழங்கியுள்ளார்.
சபாநாயகரிடம் தனக்கான நேரத்தைக் கேட்டு
இந்நிலையில், அதற்கு மேல் பேச வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
துரைராசா ரவிகரன் எம்.பி தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சரிடம் கேட்ட கேள்வியின் போது இரண்டாவது கேள்வியை அர்ச்சுனா ராமநாதன் எம்.பி கேட்பதாக கூறியதை தொடர்ந்து அவையில் சபாநாயகரிடம் அர்ச்சுனா எம்.பி தனக்கு ஒதுக்கப்படும் நேரத்தை அறிந்து கொண்ட அதன்பின்னர் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



