எதிர்காலம் மிகவும் ஆபத்தானது: ஹர்ஷ டி சில்வா
எதிர்காலம் மிகவும் ஆபத்தானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடு என்ற ரீதியில் படுபயங்கரமான நிலையில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளினால் எதிர்காலத்தில் பெரும் சவால்களை நாடு எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கடினமான பாதையில் செல்வதற்கு அனைவரும் ஆயத்தமாக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறின்றி பழைய பாதையிலேயே பயணித்தால் நாடு துரதிஸ்டவசமான நிலைக்கு செல்வதனை தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் குடியேற வாய்ப்பு
தனிப்பட்ட ரீதியில் தமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும் எந்தவொரு நிமிடத்திலும் அமெரிக்காவிற்கு சென்று குடியேற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைவரும் ஒன்றிணைந்து சவால்களை வெற்றிகொள்ள முயற்சிக்க வேண்டுமென கூறியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 25 நிமிடங்கள் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam