யாழில் விசேட நோன்பு நிகழ்வில் கலந்துக்கொண் டக்ளஸ் தேவானந்தா
யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்ற இஸ்ஸாமிய மக்களின் நோன்பு நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) கலந்துகொண்டுள்ளார்.
குறித்த நிகழ்வானது யாழ்ப்பாண முஸ்ஸிம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று (28.03.2024) இடம்பெற்றுள்ளது.
நோன்பு நிகழ்வு
மன்னித் முஹம்மதியா பள்ளிவாசலின் தலைவரும் சாமதான நீதிவானுமான பி.எஸ்.எம் சரபுல் அனாம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டுள்ளார்.
மேலும் இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் சா.சுதர்சன் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர்கள், இஸ்ஸாமிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |