அதிகார மமதை கொண்டவர்களுக்காக தமிழ் மக்களின் வாக்குகள் சிதறக்கூடாது: டக்ளஸ் தரப்பு வலியுறுத்து
உட்கட்சி அதிகார மமதையில் இருப்பவர்களின் நலன்களுக்காக தமிழ் மக்களின் வாக்குகள் சிதறக்கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (03.09.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி தேர்தல்
“தற்போது ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் சூழலில் சில கட்சிகள் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பின்னரே தத்தமது கட்சிகளின் நிலைப்பாட்டை வெளியிடுவதாக கூறியிருந்தார்கள்.
தற்போது பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்துள்ள சூழலில் தமிழ் மக்களின் அரசியல் நலன்சார்ந்த எவ்விதமான திட்டங்களும் உள்ளடக்கப்படாத வேட்பாளர்களுக்கு எழுந்தமானமாக தத்தமது அதிகாரத்தை நிலைநிறுத்தும் போட்டியில் தீர்மானங்களை அறிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.
ஆனால் தமிழ் மக்களது அரசியல் உரிமை தொடர்பாக எந்தவிதமான கரிசனைகளையும் இக்கட்சிகள் கொண்டிருக்கவில்லை” என்றார்.
மேலதிக தகவல் தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |