அநுரவிற்கு ஆபத்தாகப்போகும் டக்ளஸ்- பிள்ளையானின் கைது!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் தற்போது முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காகவே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையானை சிறையில் அடைத்துள்ளனர் என மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
புதிய வருட ஆரம்பத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை ஒழிப்பதற்காக போராடியவர்களை அநுர அரசாங்கம் கைது செய்கின்றது என்ற விடயத்தை முன்னிலைப்படுத்துவதற்கு தற்போது அவர்களின் வழமையான இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 23 மணி நேரம் முன்
ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா... Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri