கிளிநொச்சியில் நவீன மிளகாய் செய்கையை பார்வையிட்ட டக்ளஸ்
கிளிநொச்சியில் (Kilinochchi) நவீன விவசாய விரிவாக்கல் முறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மிளகாய்ச் செய்கையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) பார்வையிட்டுள்ளார்.
கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் நவீன விவசாய விரிவாக்கல் முறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மிளகாய்ச் செய்கையை இன்று (17.05.2024) பார்வையிட சென்ற அமைச்சர் செய்கையாளருடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார்.
நவீன விவசாய திட்டம்
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
"ஜனாதிபதியினால் நாடுபூராகவும் நவீன விவசாயத்திற்காக 100 இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், யாழ்ப்பாணத்தில் உடுவில் பிரதேசமும், கிளிநொச்சியில் கண்ணகிபுரமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளாார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




