அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எங்களை புறம் தள்ளிவிட்டார்: நிறஞ்சன் பரிமளா (photo)
கிராஞ்சியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட அட்டப்பண்ணைகளை அகற்றுங்கள் என 100 நாட்கள் போராட்டம் நடத்தியும் அமைச்சர் எங்களைப் புறம் தள்ளிவிட்டார் என தேசிய கடற்தொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் அரும்பு பெண்கள் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட தலைவி நிறஞ்சன் பரிமளா தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் நேற்றைய தினம் (08.01.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கிராஞ்சி இலவன்குடா பகுதியில் பல காலமாக பெண்கள் இறால் மட நண்டு மற்றும் அட்டைகளை இயற்கையாகவே பிடித்து விற்பனை செய்து வந்தார்கள்.
அட்டப்பண்ணைகளை அகற்றுமாறு கோரி போராட்டம்
இந்நிலையில் தற்போது கிராஞ்சி இலவன்குடா பகுதியில் சிறு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் முகமாக அட்டைப்பண்ணைகளை அமைத்துள்ளனர்.
அண்மையில் ஆளுநர் செயலகம் முன் முறையற்ற அட்டப்பண்ணைகளை அகற்றுமாறு கோரி போராட்டம் நடத்திய பின் அமைச்சர் டக்ளாஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு சென்று மனு ஒன்றை வழங்கினோம்.
கடிதம் வழங்கியும் அமைச்சர் எமது கோரிக்கை தொடர்பில் எங்களுடன் பேசவில்லை மாறாக இன்னொரு கடிதத்தை தாருங்கள் பார்க்கிறேன் என கூறினார்.
நாங்கள் அமைச்சரை நம்பி இருந்தோம் எமது பிரச்சினைகளைத் தீர்ப்பார் என ஆனால் அது நடைபெறவில்லை. அமைச்சர் கூறியிருந்தார் நித்திரை கொள்பவனை எழுப்பலாம் நித்திரை கொள்பவர் மாதிரி நடிப்பவனை எழுப்ப முடியாது சுடுதண்ணி ஊத்தி தான் எழுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம்
நாங்கள் நடிக்கவில்லை கிராஞ்சிகள் பத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் அட்டைப் பண்ணையால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
ஆகவே வாழ்வாதாரம் பறிபோன நிலையில் போராட்டம் நடத்தி வரும் எங்களுக்கு இனியாவது அமைச்சர் எமக்கு சரியான தீர்வை பெற்று தர வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய தேசிய கடற்தொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு, கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாஸ் கருத்து தெரிவிக்கையில்,
வடபகுதியில் தற்போதுள்ள முக்கிய பிரச்சினை கடலட்டைப்பண்ணை உருவாக்கம்.
குறிப்பாக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் தான்தோற்றித்தனமாக உருவாக்கப்படுவதால் அவர்களின் தொழில் மற்றும் தொழில்சார் விடயங்கள் பாதிப்படைகின்றது.
கிராஞ்சியில் 100 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடி வரும் நிலையில் போராட்ட இடத்திற்கு முன்னாலே 83 கடற்தொழிலாளர்களுக்கு கடலட்டைப் பண்ணைக்கு அனுமதி வழங்கிய நிகழ்வானது கண்டிக்கத்தக்கது.
குறிப்பாக அரசின் முக்கிய அமைச்சராக இருப்பவர் இவ்வாறு செயற்படுவது வெறுப்புக்குரியதாகும்.
பூநகரி பிரதேச செயளாளர் எவ்வித கடலட்டைப் பண்ணைக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை எனக் கூறிய போதும், அமைச்சர் எவ்வாறு அனுமதி வழங்கினார் என்ற விடயம் கேள்விக்குரியது. இதனால் சிறு மீன்பிடியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளால் கரையோரத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் தொழில் செய்ய ஆழ்கடலுக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
