கிழக்குமாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்கள் ஆளுநரால் கையளிப்பு!(Photos)
கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் நிலைபேண்தகு விவசாய அபிவிருத்தி வேலை திட்டத்தின் கீழ் செயல்பட்ட 22 விவசாய நிறுவனங்களுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்துள்ளார்.
இந்த வழங்கி வைப்பானது இன்று(09.06.2023) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம் பெற்றுள்ளது.
அரச அதிகாரிகள்
இந்நிகழ்வில் வர்த்தக இராஜங்க அமைச்சர் வியாழேந்திரன், திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல,மாகாண பிரதம செயலாளர் மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |