மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தேங்காய் எண்ணெய் விவகாரம்
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் முறையான ஆய்வுகள் இன்றி சந்தைக்கு வெளியிடப்படுவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று(12.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் நேற்றையதினம் கொழும்பு, பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் விலைக் காட்சிப்படுத்தப்படாத வாகன உதிரிபாக விற்பனை நிலையங்களைத் தேடி சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
சட்ட நடவடிக்கை

மேலும், , நுகர்வோர் சட்டத்திற்கு ஏற்ப வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து, விலையை காட்சிப்படுத்தாத கடை உரிமையாளர்களை நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri