டொலர் தட்டுப்பாடு:துறைமுகத்தில் சிக்கியுள்ள 1500 கொள்கலன்கள்
டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியவசிய பொருட்களை ஏற்றிய சுமார் ஆயிரத்து 500 கொள்கலன் பெட்டிகள் துறைமுகத்தில் சிக்கி இருப்பதாக அத்தியவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்வோர் மற்றும் வர்த்தக சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இவற்றில் சுமார் 50 கொள்கலன் பெட்டிகள் மட்டுமே வர்த்தகர்களால் கட்டணங்களை செலுத்தி வெளியில் கொண்டு செல்லப்பட்டுள்ளன. துறைமுகத்தில் சிக்கியுள்ள கொள்கலன் பெட்டிகளில் அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியவசிய உணவு பொருட்கள் இருக்கின்றன.
தினமும் அதிகளவிலான கொள்கலன் பெட்டிகளை விடுத்துக்கொள்வதற்கு தேவையான டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் உட்பட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையை கோரியுள்ளோம்.
தேவையான டொலர்களை துரிதமாக வழங்கி கொள்கலன் பெட்டிகளை விடுவிக்காது போனால், எதிர்வரும் பண்டிகை காலத்தில் அத்தியவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
