மீண்டும் ரூபாவின் பெறுமதியில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்-செய்திகளின் தொகுப்பு
கடனை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டு, இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் இலங்கை ரூபாவின் மதிப்பு மீண்டும் குறைய வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
சரக்கு இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்துவது இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மை தற்காலிகமான நிலை ஆகும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஏற்கனவே வழங்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் நோக்கில் அரசாங்கம் செயற்படுமானால் அது ஜனநாயக விரோத நடவடிக்கையாக அமையும்.
எக்காரணம் கொண்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் அவ்வாறானதொரு நிகழ்வுக்கு எமது கட்சி தயாராக இருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
