நாட்டின் வெளிநாட்டு கையிருப்புக்கு பெரும் ஆபத்து!
நாட்டின் டொலர் கையிருப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில், மறுபுறம் பெருமளவில் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக காண்பித்து போலி விலைப்பட்டியல்கள் (Fake Invoices) தயாரிக்கப்பட்டு பெருமளவு டொலர் வெளியில் அனுப்பும் பாரிய மோசடியை புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
காலணிகள் (Shoes), ஆடம்பரப் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் (Cosmetics) போன்றவற்றை இறக்குமதி செய்வதற்காக நாட்டிலிருந்து பெருமளவிலான அமெரிக்க டொலர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றன.ஆனால், அதற்கு பெறுமதியான பொருட்கள் இலங்கைக்கு வருவதில்லை.
புலம்பெயர் அமைப்புகளிடம் அரசு பெற்ற நிதியை உடனடியாக வெளிப்படுத்துங்கள்! அர்ச்சுனா எம்.பிக்கு பத்தரமுல்ல சீலரத்ன தேரர் சவால்
சுங்கத் திணைக்களத்திற்கு ஏற்பட்ட சந்தேகம்
இந்த விடயம் தொடர்பில் சுங்கத் திணைக்களத்திற்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்தது.
பின்னர் இந்த விசாரணை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த பாரிய மோசடியுடன் தொடர்புடைய முக்கிய புள்ளியாக புறக்கோட்டை பகுதியில் இயங்கும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளரான ஜெப்ரி முகமட் (Jeffry Mohamed) என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரைத் தவிர மேலும் நால்வர் அல்லது ஐவர் இந்த மோசடியுடன் தொடர்புபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது நிறுவனத்தின் விலைப்பட்டியல்களைப் பரிசோதித்தபோது, அவை முற்றிலும் போலியானவை என்பது தெரியவந்தது.
உதாரணமாக, இலங்கை மதிப்பில் 500 இலட்சம் ரூபாய் (5 கோடி) பெறுமதியான காலணிகள் அடங்கிய கொள்கலன் ஒன்றிற்கு, அவர்கள் 2500 கோடி ரூபாய்க்கான போலி விலைப்பட்டியலைத் தயாரித்துள்ளனர்.
அதாவது ஒரு ரூபாய் பெறுமதியான பொருள் ஒன்றை 100 ரூபாய் எனக் காட்டி, மீதிப் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும், சில பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யும்போது கிடைக்கும் வரிச் சலுகைகளையும் அவர்கள் பெற்றுள்ளனர். இதன் மூலம் பணச் சலவை அல்லது கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் செயலிலும், வரி ஏய்ப்புச் செய்து பணத்தைப் பதுக்கும் செயலிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணப் பரிமாற்றத்தின் ஊடாக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பணமும், 'உண்டியல்' முறைக்கு இணையான பிற முதலீட்டுத் திட்டங்களின் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தவிர, கடந்த காலங்களில் சில அரசியல்வாதிகளின் பணமும் இவரூடாக வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் 2019 ஆம் ஆண்டில் ஒரு தனிநபர் நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.
இதுவரையில் இவர் மாத்திரம் பல்வேறு சந்தர்ப்பங்களில் 700 மில்லியன் டொலர்களை (சுமார் 21,000 கோடி ரூபாய்) நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார்.இது நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக சீர்குலைப்பதற்காக செய்யப்பட்ட ஒரு திட்டமிட்ட பாரிய மோசடியாகும்.
ஜெப்ரி முகமட் என்ற நபருக்கு உயர் மட்ட அரசியல் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருடன் தொடர்புகள் இருந்தமையினால், அவரை ஒருபோதும் கைது செய்ய முடியாது என்று சில பொலிஸ் அதிகாரிகள் கூடக் கூறியிருந்தனர்.
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு அவரைக் கைது செய்யச் சென்றபோது, அதனை அறிந்துகொண்ட அவர் அப்பகுதியிலிருந்து தப்பியோடி மறைந்திருந்த நிலையில்,நீர்கொழும்பு பகுதியிலுள்ள ஒரு வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan