பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள்
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் கணக்காளருக்கு எதிராக இன்று காலை 8.00 மணி முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய வைத்தியர்கள் உட்பட சுகாதார ஊழியர்களின் சம்பளத்தில் சுமார் 25 சதவீதம் தன்னிச்சையாக கழித்தமைக்காக கணக்காளருக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் வைத்தியர் தினேஷ் யாப்பா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவசர சிகிச்சைப் பிரிவுகள், குழந்தைகள் பிரிவுகள், புற்றுநோய் பிரிவுகள் மற்றும் சிறுநீரகப் பிரிவுகளில் சிகிச்சைகள் வழமைபோல் நடைபெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri