எரிபொருள் வரிசையில் நிற்காதீர்! பொதுமக்களுக்கு அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு
எதிர்வரும் 3 நாட்களுக்கு (20, 21, 22) எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் செய்தி
எரிபொருள் விநியோகம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் வழமைக்கு கொண்டுவரப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனியார் பயணிகள் பேருந்துகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைகளுக்கு இன்று முதல் 24 மணிநேரமும் இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாக எரிபொருளை வழங்குமாறும் ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் எரிசக்தி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நயன் வீட்டில் மட்டுமல்ல செல்வராகவன் வீட்டிலும் விசேஷம்! கோயிலில் இருந்து வெளியான புகைப்படம் Manithan
