புலனாய்வு பிரிவினரை அனுப்பி கூட்டங்களை உளவு பார்க்க வேண்டாம்! ஜே.வி.பி கோரிக்கை
எமது கட்சியின் கூட்டங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு புலனாய்வுப் பிரிவினரை அனுப்பி வைக்க வேண்டாம் என ஜே.வி.பி.அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தமது கட்சியினால் நடாத்தப்படும் கூட்டங்களை கண்காணிப்பதற்கு புலனாய்வுப்பிரிவினரை அனுப்பி வைக்கத் தேவையில்லை, எனக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தால் அனைத்து விபரங்களையும் வழங்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டம் நடாத்தப்பட்ட விஹாரைக்கு நான்கு தடவைகள் புலனாய்வுப் பிரிவினர் சென்று விசாரணை நடத்தியுள்ளனர், கூட்டங்களை ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளர்களின் வீடுகளுக்கும் சென்று விசாரணை நடாத்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri