ஊடகவியலாளர்களை சீ.ஐ.டிக்கு அழைக்க வேண்டாம் - பிரதமர்
சதோச நிறுவனத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் வெள்ளை பூண்டு மோசடி சம்பந்தமான செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்களை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைப்பதை தவிர்க்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச அந்த திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் டளஸ் அழகப் பெரும இதனை கூறியுள்ளார்.
சதோச நிறுவனத்தின் அதிகாரிகள் மேற்கொண்டதாக கூறப்படும் வெள்ளை பூண்டு மோசடி தொடர்பாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்ததுடன் அந்த முறைப்பாடு குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த மோசடி தொடர்பான செய்திகளை வெளியிட்ட நாட்டின் தேசிய பத்திரிகைகளில் ஆசிரியர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் அனைவரையும் இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.





சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
