முல்லைத்தீவின் வளங்களைச் சுரண்டாதீர்கள், தனி மறை மாவட்டமாக்குங்கள் - பீற்றர் இளஞ்செழியன்

Srilanka Jaffna Mullaitivu
By DiasA Jun 17, 2021 12:44 AM GMT
Report

யாழ்.ஆயர் இல்லத்தினால் 2018 ஆம் ஆண்டு இன்னொருவருக்கு உரிய முறையில் மண் அகழ்வை அல்லது அபிவிருத்தியினை செய்ய சட்டரீதியாக வழங்கியது. அதே சட்டத்தினை பின்பற்றியே ஆயர் இல்லம் தற்போது அவர்களுக்கு முன்னுதாரணமாக தாங்களும் அதன் அருகில் உள்ள காணியில் ஒரு மண் குவியலை செய்துள்ளார்கள் என்று பூச்சாண்டி தனமான அறிக்கையினை வெளியிட்டுள்ளனர் என இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும்,வாலிபர் முன்னணியின் பொருளாளரும்,முல்லைத்தீவு மாவட்ட வாலிபர் முன்னணியின் பிரமுகருமாகிய பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணியில் மணல் குவிப்பு மற்றும் மணல் அகழ்வு தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உப்பமாவெளி,சுவாமிதோட்டம் பகுதிகளில் மணல் அகழ்வு தொடர்பில் இடத்திற்கு சென்று வெளிக்கொண்டுள்ளோம். இது குறித்து யாழ் .ஆயர் இல்லம் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட மண்ணுக்குள் உண்மையினை புதைத்து வைக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகின்றது.

யாழ்.ஆயர் இல்லத்தினால் 2018 ஆம் ஆண்டு இன்னொருவருக்கு உரிய முறையில் மண் அகழ்வை அல்லது அபிவிருத்தியினை செய்ய சட்டரீதியாக வழங்கியது. அதே சட்டத்தினை பின்பற்றியே ஆயர் இல்லம் தற்போது அவர்களுக்கு முன்னுதாரணமாக தாங்களும் அதன் அருகில் உள்ள காணியில் ஒரு மண் குவியலை செய்துள்ளார்கள் என்று பூச்சாண்டி தனமான அறிக்கையினை வெளியிட்டுள்ளனர் என

அவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் படி அவர்களுக்கு எங்கு எங்கெல்லாம் சென்று அனுமதி பெற்றுத் தான் மண் அகழ்வினை அல்லது அபிவிருத்தியை மேற்கொள்ளலாமே தவிர அவர்கள் பூஞ்சாட்டி தன்மையான அறிக்கையினை விட்டுவிட்டு மக்களை ஏமாற்றும் தன்மை வருந்தத்தக்க விடயம். கனியவளத்திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களத்தின் அனுமதி இல்லாமல் அறுதி உறுதி காணி வைத்திருப்பவர் கூட மண் குவியலை செய்யமுடியாது. இவற்றை எல்லாம் அறிந்த ஆயர் இல்லம் இன்னுமொரு பங்குத்தந்தைக்கு மண் அகழ்வினை செய்யுமாறு பணிப்புரை வழங்கியது கேலிக்குரிய விடயம்.

இந்த மண் அகழ்விற்கு எதிராக மக்கள் எவ்வளவோ ஆர்ப்பாட்டம் செய்கின்ற பொழுதும் அதனை ஏற்றுக்கொள்ளாது தற்பொழுது சுவாமி தோட்டத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற அந்த பங்குத்தந்தை அவர்கள் ஆயரின் அனுமதியுடன் மட்டும் மண் அகழ்வை செய்தார் என்பது நகைப்புரியது.

உண்மைகளை மறைப்பதற்காக ஆயர் இல்லம் பூச்சாண்டி தனமாக அறிக்கையினை வெளியிட்டுள்ளது. முல்லை வாழ் மக்களையும் அந்த கிராம மக்களையும் யாழ். ஆயர் இல்லம் முட்டாள்களாக நினைக்கக்கூடாது.

ஆயர் இல்லம் தங்கள் காணியில் மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கியுள்ளதாகவும் பொதுத்தேவைகளுக்காய் காணிகள் வழங்கியுள்ளதாக சொல்லியுள்ளது. அப்படியாயின் முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பூப்பந்தாட்ட விளையாட்டு அரங்கு கட்டுவதற்கு 10 அடி நிலத்தை வழங்காதவர்கள் இப்படி இருட்டிப்பு அறிக்கை விடுவது நகைப்புக்குரியது.

யாழ் .ஆயரிடம் கேட்கின்றோம். நீங்கள் யாரேனும் ஒருவருக்கேனும் இறுதி போரின் பின்பு நிதி பெறாமல் காணி ஏதேனும் வழங்கியுள்ளீர்களா இதனை தெளிவுபடுத்த முடியுமா? இந்த ஆயர் இல்லம் வெளிப்படையாக குழுவினை அமைத்து நாங்கள் சட்டவிரோதமாக மண் குவியல் செய்யவில்லை என்பதை வெளிப்படையாக சொல்ல முடியுமா?

கனியவள திணைக்களம் வெளிப்படையாக சொல்லியுள்ளது. அனுமதி பெறாமல் குவிக்கப்பட்ட மணல் என்றும் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்டவர்களை உடன் கைது செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

ஆயர் இல்லத்தால் மண் குவியல் செய்யப்பட்டதற்கு பயன்படுத்தப்பட்ட ஒருவர் மண் மாபியா ஆவார். இவர் போருக்கு பின்பு மண் அகழ்விலே ஈடுபட்டு வருகின்றார். அவருடைய இயபத்திரங்களே பயன்படுத்தப்பட்டதுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவரை வைத்து இந்த செயற்பாட்டினை செய்துள்ளார்கள்.

பொலிஸாரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்களா என்பதில் எங்களுக்கு சந்தேகங்கள் உள்ளது.நீதிமன்ற கட்டளையினை நடைமுறைப்படுத்தாது இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதிலும் எங்களுக்கு சந்தேகம் இருக்கின்றது.

பொலிஸாருக்கும் ஏதும் வழங்கப்பட்டு விட்டாத என்றும் கேள்வி எழுப்ப தோன்றுகின்றது. இது நீதிமன்ற விசாரணை இருப்பதினால் மேலதிகமான எதுவும் கூற முடியாது. முல்லைத்தீவு மாவட்டம் நீண்ட ஒரு நிலப்பரப்பினை கொண்ட மாவட்டம் யாழ்.மறை மாவட்டம் என்ற பெயரில் யாழ். ஆயர் இல்லம்  ஆயர் இல்ல காணி என்று சொல்ல முடியாது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கத்தோலிக்கர்களுக்கு சொந்தமான இடத்தினை ஆழுகின்றார்கள். திருகோணமலை மாவட்டம் சிறிய ஒரு மாவட்டம் இன்று தனி மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் வளத்தினை பயன்படுத்தி தான் யாழ். மறைமாவட்டம் என்ற பெயரில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆழுமையினையும்,அனைத்து வளங்களையும் குழிதோண்டி புதைத்து அதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுவாமி தோட்டத்தில் பெறப்பட்ட வருமானங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பிரதேசத்திற்கு முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை ஆயர் இல்லம் தெளிவுபடுத்த வேண்டும்.

நான் ஒரு கத்தோலிக்கன் என்ற வகையில் வெளிப்படையாக கேட்கின்றேன். முல்லைத்தீவு மாவட்டத்தினை மிக விரைவாக தனி மறைமாவட்டமாக மாற்றப்பட வேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கும் வருமானத்தினை நம்பியே அவர்கள் வாழ்கின்றார்கள் என்பது இல்லை என்றால் நிரூபித்து காட்டவேண்டும்.

போரிற்கு பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயர் இல்லத்தின் முழுமையான பங்களிப்புடன் கட்டிக்கொடுக்கப்பட்ட ஆலயத்தினை நீங்கள் சுட்டிக்காட்டுங்கள். இங்கிருந்து அனைத்து வருமானங்களும் யாழ்.மாவட்டத்திற்கே பயன்படுத்தப்படுகின்றன.எனவே இதனை ஆயர் இல்லம் வெளிப்படுத்த வேண்டும்.

முல்லைத்தீவு வாழ் மக்களுக்கு உண்மையினை வெளிப்படுத்த வேண்டும். இல்லையேல் தொடர்ந்தும் ஆயர் இல்லம் செய்யும் முழு அடாவடித்தனங்களும் வெளிப்படுத்தப்படும் .சுவாமி தோட்டத்தின் பின்பகுதி அதாவது அருட்தந்தை வசிக்கும் இல்லத்துக்கு பின்பகுதி ஏறக்குறைய ஒரு கோடி ரூபாவிற்கு மேற்பட்ட மண்கள் அகழப்பபட்டு இப்போது குளமாக வந்துள்ளது. அந்த மண் எங்கே போயுள்ளது .அந்த பணம் எங்கே இருக்கின்றது என்பதையும் ஆயர் வெளிப்படையாக கூறவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, சூரிச், Switzerland

01 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
மரண அறிவித்தல்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, தெஹிவளை, வெள்ளவத்தை

03 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, சிட்னி, Australia

06 May, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Herdecke, Germany

04 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை, Harrow, United Kingdom

04 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை, கொழும்பு, Geneva, Switzerland

04 May, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US