அகதிகள் சிறை வைக்கப்பட்டுள்ள ஹோட்டலில் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்!
உலகின் முதன்மையான டென்னிஸ் விளையாட்டு வீரராக அறியப்படும் நோவாக் ஜோகோவிச் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டிற்கு சென்றிருந்த நிலையில், கொரோனா தடுப்பூசி விலக்கு விவகாரத்தினால் அவரது விசா ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இவ்விவகாரம் அவுஸ்திரேலியா மட்டுமின்றி உலக அளவில் பெரும் விவாதத்தை உருவாக்கி இருக்கின்றது.
அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள ஜோகோவிச் நாடு கடத்தப்படுவது தொடர்பாக வரும் திங்கட்கிழமை (ஜனவரி 10) அவுஸ்திரேலிய நீதிமன்றம் முடிவெடுக்க உள்ளது.
நோவாக் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்துவதற்கு எதிரான கருத்தை கொண்டவராக உள்ள நிலையில், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நோவாக் ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிகள் என்பது விதிகள் தான், அதுவும் குறிப்பாக எங்களது எல்லைகளுக்கு வரும் பொழுது. எவரும் அந்த விதிகளுக்கு மேலானவர்கள் கிடையாது.
உலகின் மிகக் குறைந்த கொரோனா இறப்பு விகிதங்களை கொண்ட அவுஸ்திரேலியாவுக்கு வலுவான எல்லைக் கொள்கைகள் முக்கியமானவை, நாங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்கிறோம்,” என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தனது ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.
இது ஒருபுறமிருக்க மெல்பேர்னில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹோட்டலில் நோவாக் ஜோகோவிச் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் குடிவரவுக் கொள்கைகள் தொடர்பான விவாதங்கள் மேலெழுந்துள்ளன. மெல்பேர்னில் உள்ள பார்க் ஹோட்டல் அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற அகதிகளை வைத்துள்ள தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்பட்டு வருகிறது.
“ஜோகோவிக் பற்றி என்னிடம் கேட்க பல பத்திரிகையாளர்கள் நேற்று என்னைத் தொடர்பு கொண்டது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
நான் 9 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருக்கிறேன்….நான் எப்படி இருக்கிறேன் எனக் கேட்பது போல் பாசாங்கு செய்து கொண்டு உடனடியாக ஜோகோவிக் பற்றிய கேள்விகளை கேட்கின்றனர்,” என ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ள மெஹிதி அலி எனும் அகதி ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அவுஸ்திரேலிய அரசால் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக்கோரி இந்த ஹோட்டலுக்கு வெளியே நேற்று (ஜனவரி 6) போராட்டம் நடந்திருக்கிறது.
இந்த நிலையில், ஜோகோவிக்கை நல்லதொரு ஹோட்டலுக்கு கொண்டு செல்லும்படி அவுஸ்திரேலிய அரசை செர்பிய அரசு வலியுறுத்தியுள்ளது.
அதே சமயம், “ஹோகோவிக் அவர்
விரும்பும் வகையில் எந்நேரம் வேண்டுமானாலும் வெளியேறலாம், அவுஸ்திரேலிய எல்லைப்
படை அதற்கான ஏற்பாட்டை செய்யும்,” என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரேன்
ஆண்டுருஸ் தெரிவித்துள்ளார்.
![செக்யூரிட்டி வேலையில் இருந்து இதெல்லாம் செய்துள்ளாரா சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றி வசந்த்.. அவரே பகிர்ந்த விஷயம்](https://cdn.ibcstack.com/article/a652ae38-00b4-4954-9b30-cf4208e4e671/24-66878c9f01fa7-sm.webp)
செக்யூரிட்டி வேலையில் இருந்து இதெல்லாம் செய்துள்ளாரா சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றி வசந்த்.. அவரே பகிர்ந்த விஷயம் Cineulagam
![ராமராஜன் பட நடிகை நிஷாந்தியா இது? 54 வயதிலும் செம கிளாமராக எடுத்த போட்டோ ஷுட்... வைரலாகும் போட்டோஸ்](https://cdn.ibcstack.com/article/a52dca7d-2f82-4f2e-9bb0-d85586d6756f/24-6687aa150ff03-sm.webp)
ராமராஜன் பட நடிகை நிஷாந்தியா இது? 54 வயதிலும் செம கிளாமராக எடுத்த போட்டோ ஷுட்... வைரலாகும் போட்டோஸ் Cineulagam
![வேலையை இன்றே தொடங்குகிறோம்..! பிரித்தானியாவின் புதிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் பேச்சு](https://cdn.ibcstack.com/article/6c43a064-b405-4348-bc32-a0ed8ad5cc7b/24-6687fb69bd8ce-sm.webp)
வேலையை இன்றே தொடங்குகிறோம்..! பிரித்தானியாவின் புதிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் பேச்சு News Lankasri
![ரூ.15000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியா வீடு - திருமணத்திற்காக எப்படி அலங்கரிக்கப்பட்டுள்ளது தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/8ea2ef6b-ec53-429f-acde-a0490b925d66/24-6688d40350499-sm.webp)
ரூ.15000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியா வீடு - திருமணத்திற்காக எப்படி அலங்கரிக்கப்பட்டுள்ளது தெரியுமா? News Lankasri
![மனைவியுடன் விவாகரத்து.. மகளுக்காக வாழும் ஜி.வி பிரகாஷின் சொத்து மதிப்பு- கோடிகளில் வெளியான விவரம்](https://cdn.ibcstack.com/article/bfb10a47-39e3-4379-b358-8601f0dcbfc3/24-6687ef565050a-sm.webp)