அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் விவாகரத்துகள் அதிகரித்துள்ளதாக இலங்கையின் மூத்த வழக்கறிஞர் திலங்கா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
புள்ளியியல் பணியகத்தின் தகவலுக்கமைய, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை சமூகத்தின் விவாகரத்து விகிதம் சுமார் 4.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவாகரத்துகள் அதிகரிப்பதற்கு வீட்டு வன்முறை ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொத்து பிரச்சினை
விவாகரத்திலிருந்து எழும் சொத்து தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டால், அவுஸ்திரேலிய சட்டத்தின்படி, அதிக தேவை உள்ள நபருக்கு அதிக பங்களிப்பு செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

Dependent விசாவில் வரும் மாணவர்களின் விவாகரத்தில் எழும் விசா பிரச்சினைகள் ஏற்பட்டால், பெரும்பாலும் Dependent நீக்கப்படுகிறது.
தொழில்முறை தகுதிகள்
அவுஸ்திரேலியாவில் வாழ எந்த தகுதியும் இல்லாத ஒரு Dependent விசா பெறுவது மிகவும் கடினம் என வழக்கறிஞர் திலங்கா பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தொழில்முறை தகுதிகள் இருந்தால், விசா கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது என அவர் கூறியுள்ளார்.
விவாகரத்து மகிழ்ச்சியை தரும் முடிவு அல்ல என்பதால், தீர்வு இல்லையென்றால் மட்டுமே விவாகரத்தை நாட வேண்டும் என வழக்கறிஞர் கூறியுள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 16 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan