98 நீர் அளவு மானிகளுடன் பிரதேசசபை தலைவர் கைது
தெரணியகல பிரதேச சபையின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்குச் சொந்தமான 98 நீர் அளவு மானிகளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பிரதேசசபைத் தலைவருக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
தெரணியகல - கும்புறுகம பிரதேசத்தில் நீர் வழங்கல் திட்டத்திற்காகக் களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த நீர் அளவு மானி உட்பட 477 பொருட்களை கடந்த மார்ச் 30ஆம் திகதி அடையாளம் தெரியாதவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து களஞ்சியத்தின் எழுது விளைஞர் உட்பட மூன்று பேர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளை அடுத்து 98 நீர் அளவு மானிகளுடன் பிரதேசசபைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.