வாகனங்களின் தரம் குறித்து பரிசோதனை
வாகனங்களின் தரம் குறித்து பரிசோதனை செய்யும் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
வாகனங்களில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளினால் அடிக்கடி வாகன விபத்துக்கள் இடம்பெறுவதாக பிரதி போக்குவரத்து அமைச்சர் ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
வாகனங்கள் பதிவு
நாட்டில் சுமார் 80 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 46 லட்சம் மோட்டார் சைக்கிள்களும் 13 லட்சம் முச்சக்கர வண்டிகளுமாகும். மாவட்ட மட்டத்தில் வாகனங்களின் தரம் குறித்து பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
மாவட்ட மட்டத்தில் வாகனங்களின் தரம் குறித்து பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாகனங்களின் தரம்
வாகனங்களின் தரத்தை பரிசோதனை செய்வதற்காக புதிதாக 20 மோட்டார் போக்குவரத்து பரிசோதகர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது கடமையில் உள்ள மோட்டார் போக்குவரத்து பரிசோதகர்கள் எண்ணிக்கையானது நாடு முழுவதிலும் வாகனங்களின் தரத்தை பரிசோதனை செய்ய போதுமானதல்ல என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

Bigg boss 9 elimination: முதல் வாரமே வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
