யாழில் கட்சி அலுவலகம் போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் (video)
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் ஒரு கட்சிக்கான அலுவலகம் அல்ல அதனால் குறித்த அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள நீல வர்ணம் அகற்றப்படும் என யாழ் மாவட்ட அரச அதிபர் அ,சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
புதிய தலைவர்
யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திற்கு நீல நிற வர்ணம் பூசப்பட்டுள்ளமை தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் எமது செய்தியாளர் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அலுவலகம் யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பு குழு அலுவலமே தவிர அது கட்சி அலுவலகம் அல்ல. ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் ஏதாவது கட்சி சார்பான வர்ணம் தீட்டப்பட்டிருந்தால் அது உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் உறுதி அளித்துள்ளார்.
சுதந்திர கட்சியின் பிரதிநிதி
இதேவேளை யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் அலுவலகத்தில் துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோட்டாய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவபடுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது கட்சியின் நிறத்தில் வர்ணம் பூசி அலுவலகம் பராமரிக்கப்பட்டுள்ளதுடன் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்து தூக்கப்பட்ட பின்னர் அலுவலகம் செயலிழந்து காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று கடற்தொழில் அமைச்சர் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின்
தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து மாவட்ட செயலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பு
குழு அலுவலகம் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் தூசு தட்டி
தூய்மையாக்கப்பட்டுள்ளது.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
