கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான மாவட்ட விவசாய குழு கூட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான மாவட்ட விவசாய குழுக் கூட்டம் இன்று
(12.09.2024) பகல் 9.30 மணிக்கு நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் முன்கொண்டு வரப்பட்டு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்
கடந்த கால கூட்ட அறிக்கை, நீர்ப்பாசன குளங்களின் தற்போதைய நிலைமைகள், சிறுபோக பயிர்ச் செய்கை, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மேலும், கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக பயிர் செய்கையினை முறையான பொறிமுறையின் கீழ் கொண்டு வருவதற்கான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதோடு கல்மடுக்குளம் குடமுருட்டி குளம் ஆகியவற்றின் சிறுபோக பயிர்செய்கை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |